Friday, July 18, 2008

அக்னி பரீட்சை

துரத்தி துரத்தி
காதலித்தேன்
உன்னை...

கடும் முயற்சிக்கு
பின் தான்
ஏற்றுக்கொண்டாய்
என்னை...

நீ என்னை
முந்தானையில்
முடிந்ததாய்...
மருந்தால்
மயக்கியதாய்
சுற்றம் உன்னை
குற்றம் சொல்கையில்
உணர்கிறேன்

ராமன் சீதையை
தீக்குளிக்கச் சொன்னதின்
நியாயத்தை.....!