Monday, October 20, 2008

தியானம்


முதுகுத் தண்டை நேராக்கி
கண்களை மூடி அமர்கிறேன்
வெளி உலகம் மறைகிறது
என்னுள்ளே இப்பொழுது நான் மட்டும்
என்னைச் சுற்றி வெற்றிடம்
இருள் நிறைந்த வெற்றிடம்
உள்ளும் புறமும் சென்று வருகிறது காற்று
நெஞ்சுக்குள் நிறைகிறது நிம்மதி
இது போதும் இப்போது
இது போதும் எப்போதும்

Tuesday, October 14, 2008

எனக்கு நானிட்ட பத்துக் கட்டளைகள்.


1.உண்மையொடு ஒட்டியிரு.
2.நன்மை செய்.
3.பொய்யான புன்னகை துரோகம்.
4.மிகச் சிறந்தவன் என்று சொல்ல்லிக் கொள்ளாதே. மிகச் சிறந்தவனாயிரு.
5.உன் ஒரு சில நண்பர்கள் உன்னை நேசிக்கட்டும்
6.மனதார பாராட்டு, தகுதியுடையவர்களை.
7.அவசியம் ஏற்பட்டால் ஒழிய தூற்றாதே.
8.வர்த்தைகளையும் மௌனத்தையும் சரியாக தேர்ந்தேடு.
9.உன் மனசாட்சி உன் எஜமானன்.
10.மகிழ்ச்சி உன் பிறப்புரிமை.